
கி.அ.தில்லைதாசன்
நான் நானாக இருந்தேன்
நீ நீயாக இருந்தாய்
நானான என்னை
ஏன் நீ நீயாக்கினாய்
நானின்று நானாக இல்லை
நீயாகிப் போனேன்
நீயன்று நீயாக இல்லை
நானாகி நின்றாய்
நீ நானென்றும்
நான் நீயென்றும்
ஊர் அறியும்
இன்று....
நானான என்னை
நீயாக மாற்றி
நீமாறிப் போதல்....
நியாயமில்லை
நீயினி நீயாக இருக்கலாம்
நான் நானாக
இருக்கப் போவதில்லை
நீயாகத்தான் இருப்பேன்