திங்கள், 19 ஜூலை, 2010

அடம்பிடித்தல்



















கி.அ.தில்லைதாசன்


ஏதோ ஒன்றை..............
இழந்தது போல்........
மனது ஏங்கிக் கொண்டிருக்கிறது.
வலிகளில் கிடந்த பொழுதுகளில்
விழிகளில்.............
ஒளிகளைத் தந்தவர்கள்
பின் நாட்களில்
வலிகளைத் தந்தார்கள்

மனது என்பது...
சிறு பிள்ளை போன்றது
அடம்பிடித்து அழுகின்றது

எனக்கு ஒளிகொடுத்தது.....
வழிகாட்டவல்ல
அவர்கள்...
வசதி பெறவென்பதை
காலம் கடந்த பின்புதான்...
மனது புரிந்து கொண்டது

இன்றும்கூட.......
மௌனமான புன்னகைகளோடு
எனைத்தேடி.....
வலம்வரும் அவர்கள்
மீண்டும் வலிகொடுக்கக்
காத்துக் கிடக்கின்றனர்

மீண்டும் என்மனது
ஏமாறுமெனில்...
உயிர்கூடப் போகலாம்.....
எனினும்
அவர்கட்கு அழுகைகள் எழாது
என்றபோதும்....
மனது அவர்களிடம்...........
ஒளிதேடி.......
அடம்பிடித்துக் கிடக்கிறது.

மனது வலிக்கிறது

கி.அ.தில்லைதாசன் செய்த பாவந்தான் என்ன யாரை அழித்தோம் யாரை எரித்தோம் யார்க்கும் தீங்கிழைத்ததில்லை மனது வலிக்கிறது எம் பாட்டன் பாட்டி பாவம் செ...