வியாழன், 22 ஜூலை, 2010
நட்டுவம்
கி.அ.தில்லைதாசன்
இரண்டு பக்கமும்
இடியிறக்க...
நட்டுவம் அழுகை கொள்கிறது
அது நாதமாய்
பலருக்குத் தெரிகிறது
நட்டுவம்
ஒளிகளைத் தொலைத்து
வசந்தங்கள் தேடுது
யாரும் அடிக்காத வரையில்
இதற்கு அமைதிகள்
சொந்தமாய்
இடையிடையில்...
இரண்டு பக்கங்களிலும்
அதிர்வுகள் வருகின்ற
பட்சத்தில்.....
வலியெடுக்கும் நிகழ்வே
இங்கு நடக்கும்
அதனை காவி வைத்தும்
அடிப்பார்
மடியில் சாயவைத்தும்
அடிப்பார்
சாயவைத் தடித்தல்
மடி கொடுத்து
வலி கொடுத்தல் ஆகும்
இதுவே இங்கு தொடர்கிறது
வலி தெரியாதவர்களின்
பிடியில் மாண்டு...
நட்டுவம்.......
அழுகை கொள்கிறது
உள்ளக வலிகளோடு.
மனது வலிக்கிறது
கி.அ.தில்லைதாசன் செய்த பாவந்தான் என்ன யாரை அழித்தோம் யாரை எரித்தோம் யார்க்கும் தீங்கிழைத்ததில்லை மனது வலிக்கிறது எம் பாட்டன் பாட்டி பாவம் செ...
-
கி.அ.தில்லைதாசன் ஏதோ ஒன்றை.............. இழந்தது போல்........ மனது ஏங்கிக் கொண்டிருக்கிறது. வலிகளில் கிடந்த பொழுதுகளில் விழிகளில்..............
-
கி.அ.தில்லைதாசன் செய்த பாவந்தான் என்ன யாரை அழித்தோம் யாரை எரித்தோம் யார்க்கும் தீங்கிழைத்ததில்லை மனது வலிக்கிறது எம் பாட்டன் பாட்டி பாவம் செ...
-
கி.அ.தில்லைதாசன் நேற்று நடந்த.... தெரு இது இன்றும்..... நடக்கிறேன் நேற்றின் தெருவாய் இன்று இது இல்லை எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் காப்பு ...
-
கி.அ.தில்லைதாசன் நீ கெட்டவள் என் நெஞ்சை எரித்துப் போனாய் நான் தொட்டவன் துரத்தித் துரத்திச் சுட்டாய் நெஞ்சில் வஞ்சம...
-
கி.அ.தில்லைதாசன் நான் நானாக இருந்தேன் நீ நீயாக இருந்தாய் நானான என்னை ஏன் நீ நீயாக்கினாய் நானின்று நானாக இல்லை நீயாகிப் போனேன் நீயன்று நீயாக ...