
கி.அ.தில்லைதாசன்
இரண்டு பக்கமும்
இடியிறக்க...
நட்டுவம் அழுகை கொள்கிறது
அது நாதமாய்
பலருக்குத் தெரிகிறது
நட்டுவம்
ஒளிகளைத் தொலைத்து
வசந்தங்கள் தேடுது
யாரும் அடிக்காத வரையில்
இதற்கு அமைதிகள்
சொந்தமாய்
இடையிடையில்...
இரண்டு பக்கங்களிலும்
அதிர்வுகள் வருகின்ற
பட்சத்தில்.....
வலியெடுக்கும் நிகழ்வே
இங்கு நடக்கும்
அதனை காவி வைத்தும்
அடிப்பார்
மடியில் சாயவைத்தும்
அடிப்பார்
சாயவைத் தடித்தல்
மடி கொடுத்து
வலி கொடுத்தல் ஆகும்
இதுவே இங்கு தொடர்கிறது
வலி தெரியாதவர்களின்
பிடியில் மாண்டு...
நட்டுவம்.......
அழுகை கொள்கிறது
உள்ளக வலிகளோடு.