வியாழன், 12 ஆகஸ்ட், 2010

மனது வலிக்கிறது




















கி.அ.தில்லைதாசன்

செய்த பாவந்தான் என்ன
யாரை அழித்தோம்
யாரை எரித்தோம்
யார்க்கும் தீங்கிழைத்ததில்லை
மனது வலிக்கிறது

எம் பாட்டன் பாட்டி
பாவம் செய்தாரோ?
தாய்மண்..........?
ஏன் வலிக்கிறது

சாபக்கேடு யார் தந்தது
சாவுகள் நாங்கள் கேட்கவில்லை
ஏன் துரத்தித் துரத்தி அடித்தார்
சுட்ட காயம் ஆறவில்லை
பஞ்சு நெஞ்சம் எரிகிறது

மண்மீது குருதிகள் தெளித்து......
ஓடினோம்
குப்பை மேட்டுச் செடிகள்......
குருதியில் துளிர்த்தன.
குருதி குழைத்த மண்...
மணக்கிறது

நாங்கள் மந்தைக் கூட்டங்களா
எம்மைத் துரத்தியதும்
துரத்திப் பிடித்து அடைத்ததும்
அவ்வாறுதான்

ஏன் சர்வதேசம் சாவு தேசத்தை.....
நினைவிற் கொள்ளவில்லை
கொல்லப்பட்ட பின்பு
விசாரணைகள் எதற்கு
வந்து பாருங்கள்....
எங்கள் வாசல்கள் இல்லை
குந்தியிருந்த நிலமும்
பறிபோகிறது

செய்த பாவந்தான் என்ன
யாரை அழித்தோம்
யாரை எரித்தோம்
யார்க்கும் தீங்கிழைத்ததில்லை
மனது..............
வலிக்கிறது.

மனது வலிக்கிறது

கி.அ.தில்லைதாசன் செய்த பாவந்தான் என்ன யாரை அழித்தோம் யாரை எரித்தோம் யார்க்கும் தீங்கிழைத்ததில்லை மனது வலிக்கிறது எம் பாட்டன் பாட்டி பாவம் செ...