வியாழன், 12 ஆகஸ்ட், 2010
மனது வலிக்கிறது
கி.அ.தில்லைதாசன்
செய்த பாவந்தான் என்ன
யாரை அழித்தோம்
யாரை எரித்தோம்
யார்க்கும் தீங்கிழைத்ததில்லை
மனது வலிக்கிறது
எம் பாட்டன் பாட்டி
பாவம் செய்தாரோ?
தாய்மண்..........?
ஏன் வலிக்கிறது
சாபக்கேடு யார் தந்தது
சாவுகள் நாங்கள் கேட்கவில்லை
ஏன் துரத்தித் துரத்தி அடித்தார்
சுட்ட காயம் ஆறவில்லை
பஞ்சு நெஞ்சம் எரிகிறது
மண்மீது குருதிகள் தெளித்து......
ஓடினோம்
குப்பை மேட்டுச் செடிகள்......
குருதியில் துளிர்த்தன.
குருதி குழைத்த மண்...
மணக்கிறது
நாங்கள் மந்தைக் கூட்டங்களா
எம்மைத் துரத்தியதும்
துரத்திப் பிடித்து அடைத்ததும்
அவ்வாறுதான்
ஏன் சர்வதேசம் சாவு தேசத்தை.....
நினைவிற் கொள்ளவில்லை
கொல்லப்பட்ட பின்பு
விசாரணைகள் எதற்கு
வந்து பாருங்கள்....
எங்கள் வாசல்கள் இல்லை
குந்தியிருந்த நிலமும்
பறிபோகிறது
செய்த பாவந்தான் என்ன
யாரை அழித்தோம்
யாரை எரித்தோம்
யார்க்கும் தீங்கிழைத்ததில்லை
மனது..............
வலிக்கிறது.
மனது வலிக்கிறது
கி.அ.தில்லைதாசன் செய்த பாவந்தான் என்ன யாரை அழித்தோம் யாரை எரித்தோம் யார்க்கும் தீங்கிழைத்ததில்லை மனது வலிக்கிறது எம் பாட்டன் பாட்டி பாவம் செ...
-
கி.அ.தில்லைதாசன் ஏதோ ஒன்றை.............. இழந்தது போல்........ மனது ஏங்கிக் கொண்டிருக்கிறது. வலிகளில் கிடந்த பொழுதுகளில் விழிகளில்..............
-
கி.அ.தில்லைதாசன் செய்த பாவந்தான் என்ன யாரை அழித்தோம் யாரை எரித்தோம் யார்க்கும் தீங்கிழைத்ததில்லை மனது வலிக்கிறது எம் பாட்டன் பாட்டி பாவம் செ...
-
கி.அ.தில்லைதாசன் நேற்று நடந்த.... தெரு இது இன்றும்..... நடக்கிறேன் நேற்றின் தெருவாய் இன்று இது இல்லை எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் காப்பு ...
-
கி.அ.தில்லைதாசன் நீ கெட்டவள் என் நெஞ்சை எரித்துப் போனாய் நான் தொட்டவன் துரத்தித் துரத்திச் சுட்டாய் நெஞ்சில் வஞ்சம...
-
கி.அ.தில்லைதாசன் நான் நானாக இருந்தேன் நீ நீயாக இருந்தாய் நானான என்னை ஏன் நீ நீயாக்கினாய் நானின்று நானாக இல்லை நீயாகிப் போனேன் நீயன்று நீயாக ...