
கி.அ.தில்லைதாசன்
நீ கெட்டவள்
என் நெஞ்சை எரித்துப் போனாய்
நான் தொட்டவன்
துரத்தித் துரத்திச் சுட்டாய்
நெஞ்சில் வஞ்சம் சுமந்து
நீ நிமிர்ந்தாய்
புன்னகைத்து
எனை வளைத்தாய்
உன் சுவாசத்துக்காய்
என்னைத் திறந்தாய்
நீ நடக்க
என்னை செருப்பாக்கினாய்
நீ சிறக்க
என்னில் வலை மாட்டினாய்
மாட்டிப்போன பிறகு
நான் நான்தான்
நீ நீதான் என்றாய்
இரந்து கேட்ட போது
இரக்கமற்ற குணத்தில்
உறுதியானாய்
உன்னிடம் நான்......
மாற்றங்கள்தான் கேட்டேன்
ஏமாற்றம் தந்தாய்.
வளைத்ததும் சிரித்ததும்
வலை போட்டதும்
என்னைத் திறந்ததும்
உனக்கு மறந்து போச்சு
நீ வளர்ந்து கொண்டிருக்கிறாய்
நான்......
வலியேறிக் கிடக்கிறேன்.