
கி.அ.தில்லைதாசன்
அந்தக் காகங்கள்....
இன்றும் கரைந்தன.
பாட்டியின்....
எட்டிப் பார்த்தல் நிகழ்வு தொடர்கிறது
யார் வருகிறார்கள்....
அவளுக்குள்....
எதிர்பார்ப்புக்கள்.
இன்றல்ல......
நீண்ட நாளாய் இவள்...
எட்டித்தான் பார்க்கிறாள்
வசதியில்லையெனினும்.....
வசந்தங்கள் கண்டவள்...
வலியேறிக் கிடக்கின்றாள்
ஒளி தேடி ஒடிந்து போனாள்
நடை தளர்ந்தாள்
தனித்துத் தவித்தல் நிலை வந்தது
ஒளியூட்ட வந்த பேரன்
எங்கு? தெரியாதாம்.
நீண்ட தேசப் பயணத்தில்
மாண்டு போய்......
இல்லை இல்லை இருக்காது.
விடை இன்னும் இல்லை.
என்ன விதியோ!
காகங்கள் நாளையும் கரையும்
எட்டிப் பார்த்தல் நிகழ்வு
பேரன் கிடைக்கும் வரை....
தொடரும்.
அவளின்.....
தாகங்கள் தீருமா?