
கி.அ.தில்லைதாசன்
அந்த மிருகங்களின்....
கோர முக
வேட்டைகள் தொடர்கின்றன.
மான்கள் மாண்டு போகும் நிகழ்வு
இடம்பெறுகின்றது
காலம் மாறி... கோலம் மாற....
வாழ்வும் மாறிப் போச்சு
இயல்புகளெல்லாம் மாறி்...
ஆக்கிரமிப்புகள் எழுகின்றன.
மாண்டு போனது தெரியும்
மீண்டுவர வழி?
துணிவோடு.......
அபகரிப்பும் தொடரும்
நாளை மலரும் துளிர்கள் கருகும்
காலை சூரியன் கடுமையாய் சுடும்
கத்தும் கடல் கவலை சுமக்கும்
காற்றும் அனல் கொள்ளும்
இனி........
மான்கள் தினமும்
வேட்டையாடப் படலாம்
துன்புறுத்தப் படலாம்
ஏது நிகழுமென்ற....
பய.....நினைவுகளோடு...
வாழ்வு தொடர்கிறது..........................!